BREAKING NEWS

பிரபல திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை(வயது 50) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அண்ணாமலைக்கு நேற்று இரவு 7 மணிக்கு திடீர் என்று நெஞ்சு வலி, மயக்கம் ஏற்பட்டதால் கீழ்பாக்கத்தில் உள்ள கே.எம்.சி.’யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம், சகுனி, படங்களில் பனாரஸ் பட்டுகட்டி, என் உச்சி மண்டையில சுர்ருங்குது, மஞ்சனத்தி நாட்டுக்கட்ட மைய வச்சி மயக்கிபுட்ட, போட்டது பத்தல மாப்ள என்று நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.
ஹரிதாஸ் படத்தில் இவர் எழுதிய, அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே என்று பாடல் இவருக்கு நல்ல பெயரை தந்தது. நிறைய பக்திப்பாடல்களையும் எழுதியுள்ளார். காப்பிராயன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.

Share this:

 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates