கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தரமுடியும் என பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு, தினமும் வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கர்நாடகாவின் சில பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பியான ரம்யா கூறுகையில், தமிழகத்திற்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்காகத் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கப்படுகிறது.
ஆனால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும். இதன் காரணமாக தமிழத்திற்கு தண்ணீர் தரமுடியாது என கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றமோ தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவு பிறபித்துள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது என கூற மறுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் பாதிப்பு காலங்களில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 75 டிஎம்சி அளவு தண்ணீர் தந்தால் போதும் என 1987-88 ஆம் ஆண்டுகளில் எம்.எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
75டிஎம்சி அளவு தண்ணீர் தமிழகத்திற்கு தந்து விட்டோம். தற்போது அதை விட கூடுதலாக தண்ணீர் கேட்பது நியாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இரு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.