சுவிற்சர்லாந்தின் பேசல் நகரில் புகழ்பெற்ற King Faisal மசூதி உள்ளது. அந்த மசூதிக்கு வந்த இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆன்டிரீஸ் நூச்சல் என்னும் பொலிஸ் ஆய்வாளர் கூறுகையில், இரண்டு மர்ம நபர்கள் சுவிற்சர்லாந்தில் அனுமதி இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
அந்த மசூதி சர்ச்சைக்கு பெயர் போனதாகும். ஏற்கனவே அங்கு இமாம் ஆக இருப்பவர் தன் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் வேறு மதத்தவர் என்பதால் அவருடன் கை குலுக்க மறுத்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.